Wednesday, May 25, 2005

சொல்லி விடு...!!!

கருமையான என் உள்ளத்தில்
விழுந்த வெண்புள்ளி நீ
வெற்றுடலும்
வீணாய் போகும் உயிரும்
உனக்காக...
என்னவளே!
எதர்க்கித்தனை மௌனம்
மௌனத்தின் மறு மெழி
சம்மதம் என்றெடுப்பதா?-வேண்டாம்
மௌனம் சம்மதம் என்று
கடந்த காலத்தில் சொன்ன
மடமையை நானும்
செய்ய விரும்பவில்லை
உன் வாய் திறந்து
இன் தமிழில்
இனிமையாய் -நான்
உன்னை காதலிப்பதாய்
சொல்லி விடு........
அது போதும் எனக்கு
அன்றென் ஆயுளில்..
அரைவாசி அதிகரித்திடும்....
உயிருக்கு உயிராய்
உறவாகிடு கண்ணே!-உனை
கண்ணுக்குள் வைத்து காப்பேன்-இது
கற்ப்பனையில் கவியேழுத நான்
கட்டும் கதையல்ல-என்
கனமான நெஞ்சத்தில் இருந்து
நெருடிக் கொண்டிருந்தவை......

Monday, May 23, 2005

காதலிக்கிறேன்...!!!

புரியாத புதிராய் இருக்கும்
உன் மெளத்தை....
காதலிக்கிறேன்...!!!
மின்னலாய்
மணிக்கொருமுறையேனும்
மலரும் உன் புன்னகையை
காதலிக்கிறேன்...!!!
தமிழீச்சியாய் -நீ
தமிழர் பண்பாட்டுடன் வாழ்வதை
காதலிக்கிறேன்...!!!
கண்டதும் காதல் செய்யும்
தேசமதில் நீ....
திடமாக இருப்பதை நான்
காதலிக்கிறேன்.....
எல்லாவற்றிலும் மேலாய் நீ
உன் உறவுகளை நேசிப்பதை
காதலிக்கிறேன்...!!!

Sunday, May 22, 2005

உன்னிடத்தில் தான்..

இமைக்குள் கண்ணாய்
நீயிருப்பாதால்- என்
இமைகள் கூட மெதுவாக தான்
மூடுகின்றன....
இதயத்தில் நீயிருப்பாதால் -என்
இதய நாடி கூட சத்தமின்றி
ஓடுகிறது....
இமைகளுக்கும் இதயத்துக்கும்
இருக்கும் காதலறிவு
இதுவரை எனக்கின்றி எப்படியானது?
நேற்றுனை காணும் வரை
இது என்ன காதல் என்று
ஏளனம் செய்தேன் -இன்று
உன் நினைவில்
உருவாக்கிவிட்டேன்
இக்கவிதையை....- இது
உன் நினைவில் மட்மே எழுந்த வரிகள்
ஏனிப்படியாகிவிட்டேன்
எலலாம் உன்னால் தான்
நீயருகில் இருக்கும் போதெல்லாம்
உன்னோடு வாழ்வதாய்
ஓர் உணர்வு உள்ளத்தை தொடும் -என்று
நிஜமாய் வாழ்வோம் என்ற ஏக்கம்
நெஞ்சத்தை தட்டும்.....
கனவுகள் பலிக்குமா...?
ஏக்கங்கள் நிறைவேறுமா....?
பதில் என்னிடமில்லை...
உன்னிடத்தில் தான்.....

நான் உன்னை நேசிக்கிறேன்..!!!

கன்னியே நீயேனை
மாற்றி விட்டாய்
கடவுளையும் காதலையும்
கனவிலும் நம்பாத என்னை
காதல் எனும் வலையில்
கன்னி நீ வீழ்த்திவிட்டாய்
எனக்குள் காதல் வரும் என்று
கனவு கூட நான் கண்டதில்லை
கள்ளி நீ எந்தன் இதயத்தை
எப்படி திருடினாய்?
திருடியதை நீ திருப்பி தந்தாலும்
திருப்பிப் பெற நான்
திடமாய் மறுப்பேன்...
உன்னிடம் நான்
திருப்பி கேட்பது என்
இதயத்தை அல்ல -என்
இதயத்தை வைக்க -உன்
இதயத்தில் ஒர் இடம்
ஏனெனில்....
நான் உன்னை நேசிக்கிறேன்...

புரிந்தால் சொல்லி விடு...!

கண் மூடினேன் உன் நினைவு
கண் திறந்தால் உன் விம்பம்
காரணம் என்னவென்று
காண துடித்தேன்
புரிகிறது - ஆனால்
புதிதாய் எப்போது நீ
எனக்குள் புகுந்தாய்?
புரியவில்லை -இது
நிஜம்தானா?
நீயும் நானும்
இணைந்திருப்பதாய் -என்
இதயம் சொல்கிறது
இதயத்தில் ஏதும் கோளாறோ?
இது வரை இல்லாத உணர்வுகள்
என்னுள் இப்போது....
எப்படியேன்று தான் புரியவில்லை...
புரிந்தால் - நீ
சொல்லி விடு