ஆழ்கிணற்றில் ஆயுளைமுடிக்கிறது...
ஆயிரம் ஆயிரம்
ஆசைகள் நெஞ்சிலே
ஆகாயமும் பூமியும்
ஆண்டவன் நிழலும்
ஆதரவுக்கில்லையேனக்கு
ஆற்றிலே இறங்கிவிட்டேன்
ஆறறிவிருந்தும்
ஆழ நான் சிந்திக்கவில்லை
ஆதலினால்..
ஆழியில் அகப்பட்ட துரும்பானேன்
ஆசையாய் நானும் -என்
ஆருயிராய் நினைத்தவள்
ஆக்கிவிட்டாள் இப்பிடியேன்னை
ஆகா பாவமென்று
ஆறுதல் சொல்ல பலருளர்
ஆனாலும்....
ஆதரவுக்கில்லையேவனும்
ஆழக்கடலே
ஆரத்தழுவும் அலையே
ஆண்டுகள் பல நெஞ்சில்
ஆசையை சுமந்து விட்டேன்
ஆதமும் ஏவாலும்
ஆரம்பித்த காதலாம் -ஆனால்
ஆண்டவன் எனக்கு
ஆசிர்வாதம் தரவில்லை
ஆருயிர் நண்பனும்
ஆலோசனை தரவில்லை
ஆசைகள் அலைபட்ட
ஆழக்கடல் கரைமணலென
ஆழக்கிணற்றில்..
ஆயுளை முடிக்கிறது....

0 Comments:
Post a Comment
<< Home