Sunday, November 13, 2005

ஏற்றுடுவேன் உனக்காக...

ஏக்கம் ஏமாற்றம்
ஏனடி இவை எனை
ஏளனாய் சூழ்கிறது
ஏக்கத்தை தந்து விட்டு
ஏமாற்றத்தையும்
ஏன் தந்தாய்
ஏது மற்ற என் உள்ளமதில்
ஏன் காதலை விதைத்தாய்
ஏழுகடல்களை தாண்டீ
ஏதோ வந்து விட்டேன்
ஏதோதோ காரணத்தால்
ஏன் எனக்குள் நீ புகுந்தாய்?
ஏளனமாய் நான் நினைத்த
ஏற்றமில்ல காதலை
ஏன் என் நெஞ்சுக்குள் புதைத்தாய்
ஏதுமற்ற தன்மையினால்
ஏதுமற்றவனாய் நான்
ஏங்கி தவிக்கிறேன்
ஏன் அதை ரசிக்கிறாய்
ஏன் எனை வெறுக்கிறாய்
ஏராளாம் வினாக்கள்
ஏனிப்படி
ஏமாற்றுகின்றாய்...
ஏதோதோ நினைவுகள்
ஏராளம் ஆசைகள் நெஞ்சில்
ஏக்கம் மட்டும் நிஜுத்தினில்
ஏன் இப்படியேனையாக்கினாய்?
ஏன் என்று பதில் சொல்ல
ஏனடி சுணக்கம் இங்கே நான்
ஏங்கிச் சாவதில் உனக்கு
ஏன்னடி ஆனந்தம்...-காதலில்
ஏழ்மையானவனா?
ஏதும் காரணம் உண்டா?
ஏதெனிலும்
ஏமாற்றாமல் சொல்லிடு
ஏற்றுடுவேன் உனக்காக...

0 Comments:

Post a Comment

<< Home