Saturday, November 12, 2005

உறுதியுடன் இருப்பேன்.....

உடல் விட்டு
உயிர் பிரிந்தாலும்
உனைவிட்டு பிரிய இந்த
உலகில் முடியவில்லை
உரிமையாய் பேசியவள்
உண்மையாய் நேசித்தவள்
உறக்கத்திலும்
உன் நினைவு தனை என்
உணர்வாய் தந்தவள்
உள்ளுணர்வு பொய் சொல்ல
உன்னையில்லை
உனக்காகவில்லை- என்று
உலகறிய உரைக்கிறாள்
உண்மையை சொல்லிடு
உயிர் மீது ஏன்
உனக்கு விளையாட்டு
உந்தன் மீத நான்
உணர்ந்தது தான் காதல்
உணர்வுகளின் உரசல்தான்
உண்மைக்காதல் என்று புரிந்தது
உனக்காக மட்டுமே
உன்னோடு மட்டுமே
உதசீனம் செய்கிறேன்
உரிமையுள்ளவர்களை
உதறித்தள்ள இது
உருவாக்கிய காதல் அல்ல
உன்னிடத்தில் எனக்கு
உருவான காதல்
உனக்காக என்
உயிர் உள்ளவரை
உறுதியுடன் இருப்பேன்...

0 Comments:

Post a Comment

<< Home