இருக்கிறேன் உனக்காக இவ்வுலகில்...
இவள் முகம் பார்த்தால்
இவனுக்குள் காதல்
இல்லையேன்று மறுத்திட
இதயமில்லை என்னிடம்
இனியவளின் வார்த்தை
இதமாய் தானிருக்கும்
இடிகள் விழும் காலமும்
இனியாய் தானிக்கும்
இது என் காதலின் ஆரம்பம்
இவள் முடிவின் இறுதியாகுமோ?
இமை மூடி திறந்தால் -என்
அமைகளை தாண்டி நீர் சொறியும்
இசையதை கேட்டால்- அதில்
இனிமையின்றி இருக்கும்
இப்படியேன் ஆகிவிட்டேன்
இறைவனிடம் கேட்டேன்
இன்று வரை பதில்லை -அருகில்
இருப்பவரிடம் கேட்டேன்
இது என்ன கேள்வி என்றார்
இப்படியேன்னை சாகவிட
இனியவளே நான் என் செய்தேன்
இதயமதை கேட்டதற்க்கு
இறக்கும் வரம் தருவதா?
இதிலுனக்கென்ன ஆனந்தம்
இன்றும் நம்புகின்றேன்
இறுதிவரை பார்க்கமாட்டேன்
இன்னோருவள் முகமதை
இருக்கிறேன் உனக்காக
இவ்வுலகில்.......

0 Comments:
Post a Comment
<< Home