Wednesday, July 06, 2005

யார் அறிவார்....?

எனக்குரியவளாய்
எனக்குத் தெரிபவளே!
ஏன்.......
ஏமாற்றங்களை மட்டும்
எனதாக்குகிறாய்
எப்போதும்
உன்நினைவில் தான்
என்னிதயம் இயங்குகிறது
ஏக்கங்களும்
ஏமாற்றங்களும்
என் சொத்தாகி விட்டது
ஏனிப்படி
எனக்குமட்டும் .....-என்
சுவாசக்காற்று தினம்
உன் பெயரை சொல்லியே
என்னிதயத்தை தழுவுகிறது
எங்கும் எதிலும்
உன்நினைவு.........-என்
ஞாபகசக்தியை கூட
குறைக்கிறது.......
என்ன நடந்தது எனக்கு?
இது உன்னால் வந்தது
உன் மேல் நான் கொண்ட
காதலால் வந்தது
காத்திருப்பு தான் காதலுக்கு
இனிமையேன்றார்
காத்திருப்பே!-என்
வாழ்வாகிடுமா?
ஏக்கங்கங்கள்....
ஏமாற்றங்கள்....
தவிப்புக்கள்...
இவற்றுடன் இப்போ!
மெல்ல மெல்ல என்னுள்
அச்சத்தின் அடையாளமும்
தெரிகிறது - அதனால்
எழும் சோகத்தால்
வரும் என் அழுகையை....
யார் அறிவார்....?

0 Comments:

Post a Comment

<< Home