Monday, July 04, 2005

சொல்லியதா?

பல நாட்கள் காதிருந்தேன்!
களவாடாலாம் என
திருடினேன் உன்
இதயத்தை.....
ஆனால் நல்ல நண்பியாய்!
அமைதியாகியது மனம்
ஆறுதலடைந்தது உள்ளம்
மறுபடியும் மறுபடியும்
என் உள்ளம் எனக்குள்
ஏதோ சொல்லியது!
என்ன உற்றுக் கேட்டேன்!
நீ என் நண்பி மட்டுமே என்றது
அமைதியான
மனமிங்குஆர்பரிக்கிறது....
அங்கலாய்க்கிறது....
பள்ளியில் நண்பியான நீ
வாழ்க்கையில்....
நல்லநண்பியாக - என்
வாழ்க்கை துணைவியாக
வரும் நாளை எண்ணி.!
எப்போது அந்நத காலம்
என்னை சேரும்!
என்னுள்ளம் சொல்லியது
உனக்கு அவள் தான் -ஆனால்
உன் உள்ளம்
உனக்கு நான் என சொல்லியதா?

0 Comments:

Post a Comment

<< Home