Monday, July 04, 2005

நிலையாய் வரும் கவிதைகள்!

உன் அமைதியில்.....
என்னுள்ளம் சாகிறது...
இத்தோடு நிறுத்தி விடு
என் மனதுக்குள் தினந்தோறும்
எத்தனை போராட்டம்!
நினைவுதான் என்
நிஜ வாழ்வாகுமா?-இல்லை
நீ எந்தன் வாழ்வில்
ஓளியாகுவாயா?
புரியவில்லை...
எதுவுமே புரியவில்லை
கதிரைகளுக்கும்..
மேசைகளுக்கும்..
நடக்கும் சக்கிதியிருந்தால்...?
என்ன செய்யுமோ!
அதை தான் நான் செய்கிறேன்
காரணம் காதல்....
ஆம்-நான்
உன் மேல் கொண்ட காதல்
நிசப்பதமான இரவுகளில்
நித்திரையற்ற வேளையில்
நினைவுகள் உன் பக்கம்
நிறுத்த முடியாத
உன் நினைவுடனே!
நிலையாய் வரும்
கவிதைகள்......!

0 Comments:

Post a Comment

<< Home